
சமர்ப்பணம் சேவா டிரஸ்ட் மற்றும் பாரதீய கோ சேவா சமிதி இணைந்து வழங்கும் இராமாயண மகாபாரத தேர்வுகள் பரிசளிப்பு விழா இன்று திருவானைக்காவல் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இராமாயண, மகாபாரத தேர்வுகளை மாநிலம் முழுவதும் உள்ள பல பள்ளிகளின் மாணவ மாணவிகள் எழுதி பரிசுகளை பெற்றனர். சுழல் கோப்பைகளும் வழங்கப்பட்டன. ஸ்மரனே சுகம் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திருந்தனர். திரு ராமகிருஷ்ணன் மாநில தலைவர், தொழிலதிபர் T.V. ஆனந்த் அவர்கள், ஓய்வு பெற்ற பேராசிரியர் V. மணி அவர்கள், சுதாகர் திலக் மாவட்ட தலைவர் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.












