கோவையில் நடைபெற்ற நூலகர்கள் கூட்டமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மாநில பொதுச்செயலாளர் திருமதி ஷகிலாபேகம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு கூட்டமைப்பின் மாநில தலைவர் திரு கி.சம்பத் அவர்கள் தலைமையேற்று விழாப்பேருரையாற்றினார்கள். பொதுக்குழுவில், ஊர்ப்புற நூலகர்களின் வாழ்வாதார நலன் கருதி ஊர்ப்புற நூலகர்களை மூன்றாம் நிலை நூல்களாக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்

இதற்காக அரசு மற்றும் பொது நூலகத்துறை அனுமதி பெற்று சென்னை சேப்பாக்கத்தில் விரைவில் நூலகர்கள் கூட்டமைப்பு சார்பாக கவனஈர்ப்பு உண்ணாவிரதத்தினை நடத்துவது சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது. ஊர்ப்புற நூலகர்கள் எந்த அளவிற்கு ஆதரவு கொடுப்பார்கள் கலந்துகொள்வார்கள் என்பது பற்றி விவாதிக்கப்பட்டது.














