இன்று திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்டம் மற்றும் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய வாசகர் வட்டம் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் திருவானைக்காவல் நூலக வாசகர் வட்டத்தின் மூலம் பட்டை தீட்டப்பட்ட வைரங்கலுள் ஒன்று நமது ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியின் முன்னாள் மாணவர் திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியின் Vishual Communication துறையின் Content Writer/ Video Editor/ Utuber எழுத்தாளர் / பேச்சாளர் / கவிஞர் என பன்முகத் தன்மை கொண்ட திரு.M.ஆனந்தன் அவர்கள் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டு 2K கிட்ஸ் பார்வையில் இன்றைய வாழ்க்கை எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

இதில் இன்றைய இளைய தலைமுறையினர் இனையத்திலும் வாழ்விலும் தெரிந்தும் தெரியாமலும் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி அதனை சரிசெய்து கொள்ளும் வழிகளை சொல்லி அனைத்து மாணவ மாணவியர் வாழ்விற்கு நல்வழி காட்டியாக இந்த நிகழ்ச்சி அமைந்தது. திரு.ஆனந்தன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.















