• Home
  • தமிழ்நாடு
  • வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு INDIAN CONTRACT ACT 1872 என்ற தலைப்பில் வகுப்பு நடைபெற்றது.
தமிழ்நாடு

வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு INDIAN CONTRACT ACT 1872 என்ற தலைப்பில் வகுப்பு நடைபெற்றது.

Email :91

திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இன்று 28/04/2025 திங்கள்கிழமை மதியம் மாண்புமிகு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி குற்றவியல் வழக்கறிஞர் சங்க  ஏற்பாட்டில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு
INDIAN CONTRACT ACT 1872 (இந்திய ஒப்பந்த சட்டம்) என்ற தலைப்பில் வகுப்பு நடைபெற்றது.

நிகழ்வினை மூத்த வழக்கறிஞர்
S. P. சௌந்தர்ராஜன் அவர்கள் துவக்கி வைத்தார். வகுப்பினை வழக்கறிஞர்கள்
P. K. கனகலட்சுமி மற்றும்
V. கீர்த்திவர்ஷினி (மாணவி) ஆகியோர் நடத்தினார்கள். இந்நிகழ்வில்  குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் P. V. வெங்கட் அவர்கள் வரவேற்றார்.

திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க
துணைத் தலைவர் R.வடிவேல்சாமி அவர்கள் நன்றி உரை ஆற்றினார்  பயிற்சி வகுப்பில் 150 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
P. V. வெங்கட்  செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts