மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பின் சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற அனுமதி வழங்கியும் பாதுகாப்பும் தந்த துவாக்குடி காவல்நிலைய ஆய்வாளர் திரு. J. மணிவண்ணன் அவர்களுக்கும், துணை காவல் ஆய்வாளர் திரு நாகராஜ் அவர்களுக்கு அமைப்பின் சார்பில் சால்வை மற்றும் ஷீல்டு வழங்கி நன்றியினை தெரிவித்துக் கொண்டோம். இந்த நிகழ்ச்சியில் நிறுவனர் & தலைவர் T.செல்வராஜ் மற்றும் மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி M சத்யா மற்றும் திருமதி R காயத்திரி மாநில மகளிர் அணி துணை செயலாளர் அவர்களும் கலந்து கொண்டனர்.














