• Home
  • தமிழ்நாடு
  • திருச்சி மாவட்டம்: முத்தரசநல்லூர் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை திருவிழா கோலாகலம்!
தமிழ்நாடு

திருச்சி மாவட்டம்: முத்தரசநல்லூர் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை திருவிழா கோலாகலம்!

Email :118

திருச்சி மாவட்டம்:
முத்தரசநல்லூர் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை திருவிழா கோலாகலம்!

திருச்சி மாவட்டம், அந்த நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், 2025-2026 கல்வியாண்டிற்கான முதல் வகுப்பு மாணவர் சேர்க்கை திருவிழா போல் இன்று (03.03.2025) கொண்டாடப்பட்டது.

விழாவின் சிறப்பம்சங்கள்:

மாணவர் சேர்க்கை: ஆண் 14, பெண் 13 என மொத்தம் 27 மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

பெற்றோர் உற்சாகம்: பெற்றோர்கள் புத்தாடை அணிந்து, பாட்டிகள் பேரக்குழந்தைகளை அழைத்து,  குழந்தைகளை சேர்க்க வந்தனர் பள்ளி வளாகம் பரபரப்பாக காட்சியளித்தது.

பரிசுகள்: பள்ளி ஆசிரியர்கள் புதிய மாணவர்களுக்கு எழுதுபொருட்களை பரிசாக வழங்கி, மனமகிழ்ச்சி அளித்தனர்.

முக்கிய விருந்தினர்கள்:
வட்டாரக் கல்வி அலுவலர்கள் மருதநாயகம், ஸ்டான்லி இராஜசேகர் ஆகியோர் மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தனர்.

வட்டார வள மைய மேற்பார்வையாளர் மீனா, ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் பிரபாவதி, உறுப்பினர்கள் மு.சதீஷ், க.மொ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீரங்கம் செஞ்சிலுவை சங்க ஆணையர், ரோட்டேரியன் சீனிவாசன் மாணவர்களுக்கு நாட்காட்டி வழங்கினார்.

விழா ஏற்பாடு: விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளித் தலைமை ஆசிரியர் சகாயமேரி சந்திரா மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக செய்து, விழாவை நிறைவேற்றினர். பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்து, தாய் மொழிக்கல்விக்கு உறுதுணையாக செயல்பட்டனர்.

இந்த விழா, அரசு பள்ளியில் கல்வி பெறும் மாணவர்களுக்கு உற்சாகத்தையும், பெற்றோருக்கு நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வளாகம்  இன்றைய நாள் விழா கோலமாக மிளிர்ந்தது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts