ஜமால் முகமது கல்லூரியின் சமூக பணித்துறை மற்றும் உன்னத் பாரத் அபியான் திட்டம் மற்றும் அருவி பவுண்டேசன் இணைந்து, திருச்சி மாவட்டம் ஒளையூர் கிராமத்தில் பெண்களின் நிலையான வளர்ச்சிக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மிகுந்த சிறப்புடன் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் திரு. இஸ்ரவேல், அருவி பவுண்டேசன் நிறுவனர் சையத் தாஹா மற்றும் அவரின் உதவியாளர் தேவா ஆகியோர் கலந்து கொண்டு, பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் சமூக நிலை மேம்பாட்டுக்கான

முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்ச்சி, ஊரின் பொதுமக்களையும், பெண்கள் உரிமைகள் மற்றும் பெண்களின் மேம்படுத்துவதற்கான பல்வேறு முக்கியமான தகவல்களை வழங்கினார்கள்.


இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மிக சிறப்பாக ஒருங்கிணைத்த ஜமால் முகமது கல்லூரி சமூக பணித்துறை மாணவி நந்தினிக்கு கல்லூரி மற்றும் அருவி பவுண்டேசன் சார்பில் சிறந்த சான்றிதழ்களுடன் பாராட்டும் வழங்கப்பட்டன.














