திருச்சிராப்பள்ளி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தன்னார்வ மாற்று திறனாளிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகள் தின விழா திருச்சியில் நடைபெற்றது.

தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் சிவப்பிரகாசம் துணைத்தலைவர் கதிரேசன் துணைச் செயலாளர் சந்திரசேகரன் மக்கள் தொடர்பாளர் கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பட்டியல் வழக்கறிஞர் ரமா பங்கேற்று சட்டப் பணிகள் ஆணை குழு செயல்பாட்டினை எடுத்துரைத்தார்.

சட்ட தன்னார்வலர்கள் எழில் ஏழுமலை, வைத்திலிங்கம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்,
தின சேவை அறக்கட்டளை அறங்காவலர் பகவதி உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.











