திருச்சி மாவட்டம் திருவரம்பூர் தாலுகா பனையகுறிச்சி ஊராட்சியில்நேற்று 17.11.2024 சமுதாயக்கூடம் திறப்பு விழாவிற்கு மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் திருகரங்களால் திறந்து வைக்கப்பட்டது.

திருச்சி கிழக்கு எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் அவர்கள் கலந்து கொண்டார். இலவச திருமணம் மற்றும் கல்யாண விருந்து உபசரிப்புகள் பனையகுறிச்சி
ஊராட்சி மன்ற தலைவர்
ரேணுகாதேவிஜெயபார்த்தசாரதி சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தார்.
ஊராட்சி பொதுமக்கள், இளைஞர்கள் பனையகுறிச்சி ஊராட்சியை புரட்டிப்போட்ட சரித்திர நாயகனே கடந்த 24 ஆண்டுகளாக வராத நிதியை வரவைத்து சரித்திரம் படைத்து அனைத்து தெருகளுக்கும் சிமெண்ட் சாலைகள் அமைத்து

தூய்மைப்படுத்தி, இதுவரை ஊராட்சி கண்டிராத பல சாதனைகளை செயல்படுத்தி, பல திட்டங்களை கொண்டுவந்து ஊர்

பொதுமக்களுக்கு திருமண மண்டபம் காணிக்கையாக கொடுத்த எங்கள் தலைவரே நீ வாழ்க என்று ஊராட்சி முழுவதும் பதாகைகள் வைத்து ஊராட்சி மன்ற தலைவரை போற்றி வருகின்றனர். நன்றி திரு.முத்து அவர்கள்.
சிறப்பு செய்தியாளர்
இலால்குடி க ரெங்கநாதன்.














