தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு முன்னணி சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு ஆர்வலர் (Soolalilyalar / Environmentalist) ஆவார். சுற்றுச்சூழல் விழிப்புணர்வை முழுநேரமாக பரப்புவதற்காகத் தனது வங்கிப் பணியைத் துறந்தார்.தமிழ்நாடு மாநில வனவிலங்கு வாரியத்தின் (State Wildlife Board) உறுப்பினராகவும் பணியாற்றியவர்,மேற்குத் தொடர்ச்சி மலைகளின் (Western Ghats) பல்லுயிர் சூழலைப் பாதுகாக்க கேரளா, கர்நாடகா மற்றும் கோவா மாநில ஆர்வலர்களுடன் இணைந்து தேசிய அளவில் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வருகிறார்.காடுகள், நீர்நிலைகள், யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் மற்றும் பூச்சிகள் அழியாமல் பாதுகாப்பதே மனித குலத்தின் உயிர்வாழ்வுக்கு அடிப்படை என்ற தத்துவத்தை மேடைகளிலும், பள்ளிக் கல்லூரிகளிலும் தொடர்ந்து பேசி வருகிறவருமான “ஒசை” காளிதாசன் திருச்சியிற்கு வருகை புரிந்த அறிந்து அவரை தண்ணீர் அமைப்பு சார்பாக செயல் தலைவர் கே.சி.நீலமேகம், செயலாளர் பேரா.கி.சதீஸ்குமார், எக்ஸ்னோரா பால சுப்ரமணியன், அமிர்தம் அறக்கட்டளை யோகா விஐயகுமார் சந்தித்து பேசியுடன் “பிளாஸ்டிக் தவிர்ப்போம், துணிப்பையை எடுப்போம்” என கூறி துணிப்பை வழங்கப்பட்டது.












