மெய்க்கீர்த்தி நூல் அறிமுக விழா!
திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில்
திருச்சி புத்தகத் திருவிழா 2026
சி.எஸ்.ஐ. செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் அரங்கு எண்17 இல்
பேராசிரியர் முனைவர் மீ.சந்திரசேகரன்
எழுதிய மெய்க்கீர்த்தி
நூல் அறிமுக விழா நடைபெற்றது.
எழுத்தாளர் பேராசிரியர் முனைவர் மீ.சந்திரசேகரன்
எழுதிய மெய்க்கீர்த்தி
நூலை அறிமுகப்படுத்த பத்மஸ்ரீ சுப்பராமன்,
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க பொதுச்செயலர் ஜவஹர் ஆறுமுகம், செயலர் விஜயகுமார், மூளை நரம்பியல் நிபுணர் மருத்துவர் எம்.ஏ.அலீம், கெளரா புத்தக மையம் கெளரா ஜெய்கணேஷ் ராஜசேகரன்,
எழுத்தாளர் கார்த்திகா கவின் குமார், திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்க சாசனத் தலைவர் முகமது ஷபி, கேசவன்,
எழுத்தாளர் சதாசிவம் உட்பட பல்வேறு எழுத்தாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.














