
இன்று திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள அழுந்தூர் ஊராட்சியில் உள்ள சமுதாயக் கூடத்தில் இரத்த சோகைமட்டும் ஊட்டச்சத்து குறைபாடு பற்றிய விழிப்புணர்வு மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்மற்றும் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து இந்த கலை நிகழ்ச்சியை நடத்தப்பட்டது. இதை தலைமையேற்று வழி நடத்திய திருமதி பரிமளா ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட மணிகண்ட வட்டார அலுவலர் அவர்கள்
மற்றும் தகவல் தொழில்நுட்ப உதவி இயக்குனர் அவர்கள் மற்றும் கலைக்குழு உறுப்பினர்கள் மக்களுக்கு தங்கள் கிராமிய கலைகளாலும் கிராமிய பாடல்களாலும் மக்களுக்கு ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு பற்றிய விழிப்புணர்வு வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து மணிகண்ட வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி பரிமளா அவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு நாள் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றியும் நாம் பெண்களுக்கு கொடுக்க வேண்டிய சரிவித உணவை பற்றியும் அன்றாட நாம்

பயன்படுத்தக்கூடிய உணவு முறை பற்றியும் நம் பயன்படுத்த வேண்டிய இரும்பு சத்து காய்கறிகளை பற்றியும் எடுத்துக் கூறினார். மற்றும் அரசு வழங்கும் திட்டங்களை பற்றியும் எடுத்துக் கூறி மக்களை பயனுள்ள பயன்படுத்திக் கொள்ளுமாறுகேட்டுக் கொண்டார் இறுதியாக நன்றி உரை திரு ராபின்சன் திவாகரன் மாவட்ட நிகழ்ச்சி

ஒருங்கிணைப்பாளர் அவர்கள் வந்திருந்த அனைவருக்கும் நன்றியினை கூறினார் இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 60 நபர்கள் கலந்து கொண்டனர்நபர்களுக்கு ஊட்டச்சத்து உணவாக கருப்பு கொண்டை கடலை மற்றும் கம்பங்கூழ் வழங்கப்பட்டது.











