பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் அரசு கலைக்கல்லூரி திருச்சி 22 இணைந்து நடத்தும் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் இன்று 28.03.2025 துவக்க விழா வேங்கூர் சமுதாயக் கூடத்தில் முதல்வர் தலைமையில் நடைபெற்றது.

நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் த.கருப்பண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை மற்றும் வேங்கூர் தலைவர் மதியழகன் விழாவுக்கு முன்னிலை வகித்தனர் மற்றும் சா நடராஜர் பிள்ளை கோவில் அறங்காவலர் வேங்கூர் சரவணகுமார் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வேங்கூர் T.கலியபெருமாள் ஊராட்சி செயலர் வேங்கூர் இவர்கள் கலந்து கொண்டு விழாவில் சிறப்புரை ஆற்றினர் நாட்டு நலப்பணி திட்ட

ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை முனைவர் M. ஷர்மிளா நன்றி உரையாற்றினார். உணவு இடைவெளிக்குப்பின் வேங்கூரில் உழவாரப் பணிகள் செய்யப்பட்டது மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.













