இன்று 08.01.2026 காவேரி மகளிர் கல்லூரி சமூகப் பணித்துறை & சாக்சீடு தொண்டு நிறுவனம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மூத்த குடிமக்கள் நலச்சங்கம் சார்பாக அந்தநல்லூர் கிராமத்தில் பெண்களுக்கு அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சமூகப்பணித்துறைத் தலைவர் Mrs. மெட்டில்டா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நுகர்வோர் பாதுகாப்பு &குடிமக்கள் நலச்சங்கத் தலைவர் திரு. கோவிந்தராஜ் அவர்கள் சாலை பாதுகாப்பு மற்றும் அரசு திட்டங்கள் குறித்து சிறப்புரை யாற்றினார். பெட்காட் நிறுவனத்தின் மாவட்ட செயலாளர் முனைவர்.

கார்த்திக் அவர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்தும் அரசின் திட்டங்கள் குறித்தும் பேசினார். C. சசி அவர்கள் சாக்சீடு நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றியும் எடுத்து கூறினார். நிகழ்ச்சியை சமூகப் பணி மாணவி சத்யா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் சுமார் 50பேர் கலந்துகொண்டனர்.















