• Home
  • தமிழ்நாடு
  • “கல்வி அலுவலர்கள் பாராட்டு”, பெற்றோர்-ஆசிரியர் ஒத்துழைப்பின் தேவையும் முக்கியத்துவமும்!
தமிழ்நாடு

“கல்வி அலுவலர்கள் பாராட்டு”, பெற்றோர்-ஆசிரியர் ஒத்துழைப்பின் தேவையும் முக்கியத்துவமும்!

Email :129

“திருநெல்வேலி மாவட்ட அரசுப் பள்ளிகள் மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் இணைந்து ” வீடுகள் தோறும் சுய கற்றல் முறை” – முன்னோடி திட்டம்”

“கல்வி அலுவலர்கள் பாராட்டு

கட்டுரை ஆக்கம்:

எஸ். சிவகுமார்,
முதல்வர் (பணி நிறைவு) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம்

அறிமுகம்:
அரசு பள்ளி மற்றும்  அரசு உதவி பெறும் பள்ளி பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து  குழந்தைகளின் 
  கல்வி தரத்தை உயர்த்துவதற்கு சுய கற்றல் முறை(Self learning) மூலம்  முயற்சி மேற்கொண்டது    ஒரு பெரிய மாற்றத்தை   ஏற்படுத்தியுள்ளது.

இது பள்ளி குழந்தைகளின் கல்வித் திறனையும், வாழ்க்கைத் திறனையும் மேம்படுத்தும் தனித்துவமான “சுய கற்றல்” செயல்பாடாகும்.

சுயக்கற்றல்: (Self-Learning) என்பது மாணவர்கள் தங்களுடைய திறன்களை பயன்படுத்தி, தனிப்பட்ட முயற்சியால் அறிவும் கற்றலும் பெற்றுக்கொள்வது ஆகும். இதில், குழந்தைகள் நேரடியாக   தங்களுடைய ஆர்வத்தினை மையமாகக் கொண்டு கற்றலுக்குச் செல்கிறார்கள். சுயக்கற்றல் முறையில், குழந்தைகள் நூல்களைப் படிப்பது,  ஆராய்வது, விளக்கங்களை புரிந்துகொள்வது, அல்லது தகவல்களைத் தேடுவதன் மூலம் தங்களின் அறிவை மேம்படுத்துகிறார்கள்.

மேலும்
சிந்தனை திறன், புதுமை, தீர்வு காணும் திறன் ஆகியவை மேம்படுகின்றன.

குழந்தைகள் வீட்டில் இருக்கும் நேரத்திலும், விடுமுறைகளிலும் ஆர்வத்துடன் பயில்வது வழக்கமாகிறது.

“சுயக்கற்றல்  என்பது நமக்கு கடந்து செல்லும் ஓர் இடைவெளி அல்ல; அது ஒரு தொடர்ச்சியான வாழ்க்கை முறை” என்பதை வலியுறுத்துகிறது.

பெற்றோர்-ஆசிரியர் ஒத்துழைப்பின் தேவையும் முக்கியத்துவமும்:

கல்வி வளர்ச்சியில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் இரு முக்கிய தூண்களாக செயல்படுகிறார்கள். பெற்றோர்கள் குழந்தைகளின் கல்வியில் தங்கள் பங்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து, ஆசிரியர்களுடன் இணைந்து கல்விப் பணி செய்கிறார்கள். இது  குழந்தைகளின் கல்வித் தரத்தையும் வாழ்க்கைத் திறமையையும் உயர்த்துகிறது.

சுயக்கற்றல் முறையின் செயல்பாடுகள்:

குழந்தைகள் சுயக்கற்றல் திறனை மேம்படுத்த, திருநெல்வேலி மாவட்டத்தின் 44 அரசுப் பள்ளிகள் மற்றும் உதவி பெறும் பள்ளி குழந்தைகள் வீடுகளில் சதுரங்கம், Cube, புத்தகம் மற்றும் செய்தித்தாள் வாசிப்பு, வீடுகள் தோறும் கரும்பலகையில் எழுதுதல் மற்றும் படித்தல்,  கயிறு  தாண்டுதல் போன்ற பல்வேறு செயல்பாடுகள் அறிமுகமாகின.

இந்த செயல்பாடுகள் குழந்தைகளின் சிந்தனை திறனை மேம்படுத்துவதோடு, அவர்களின் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

வாட்ஸ்அப் குழு மூலம் ஒருங்கிணைப்பு:

ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வாட்ஸ்அப் குழுக்களில் இணைந்து செயல்படுகின்றனர். ஆசிரியர்கள் வகுப்புகளில் பாடம் நடத்துவதோடு மட்டுமல்லாமல் மேலும் விடுமுறை காலத்தில் பயனுள்ள வகையில் குழந்தைகள் செயல்பட, செயல்பாடுகளை திட்டமிடுகிறார்கள். பெற்றோர்கள் அவற்றை வீட்டில் வழிநடத்தி, குழந்தைகளை தொடர்ந்து சுய கற்றல் மூலம் பயிற்சி செய்ய வீட்டில் சூழலை ஏற்படுத்தி ,
   செயல்பாடுகள் செய்ய வழிநடத்துகிறார்கள்.
குழந்தைகள் தினசரி கற்றலின் தொடர்ச்சியை உறுதி செய்கிறார்கள்.

கல்வி ஒரு தொடர்ச்சியான செயல்முறை:

திருநெல்வேலி மாவட்டத்தின் 44 பள்ளிகளில் சுயக்கற்றல் முறை மிகச் சிறப்பாக செயல்படுகிறது. இது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், அவர்களின் தனிப்பட்ட மற்றும் சமூக திறன்களுக்கும் முக்கிய பங்களிப்பாகிறது.

பெற்றோர்-ஆசிரியர் ஒருங்கிணைந்த முயற்சி கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் தனித்துவமாகும். இது குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்யும் ஒரு பொன்னான முயற்சியாக உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த சுய கற்றல் முறை, தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. தொடர்ந்து இந்த முயற்சி பரவலாக செயல்படுத்தப்பட்டால், கல்வி ஒரு வலிமையான சமூக மாற்றத்தின் கருவியாக மாறும்.
நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts