குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
P. V. வெங்கட் அவர்கள் அறிக்கையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் மாண்புமிகு சார்பு நீதிபதி திரு A. பிரபு அவர்கள் ஏற்பாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிமன்றம் நான்காவது மாடி கூட்ட அரங்கத்தில் நாளை புதன்கிழமை 19/11/2025 காலை 9.30 மணி அளவில்
கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாம் மாண்புமிகு மாவட்ட நீதிபதி
திரு. M.கிறிஸ்டோபர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
ஆகவே அனைத்து நீதிபதிகளும், நீதிபதிகளின் குடும்பத்தாரும், வழக்கறிஞர்களும், வழக்கறிஞர் குடும்பத்தாரும், நீதிமன்ற ஊழியர்களும், மற்றும் நீதிமன்ற ஊழியர் குடும்பத்தாரும், பங்கேற்று பயனடையுமாறு மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழு சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.














