தமிழ்நாடு

நற்பண்பு தூதுவர்கள் திட்டம்”
ஊர்புற நூலகம்!

Email :76

“நற்பண்பு தூதுவர்கள் திட்டம்”
ஊர்புற நூலகம் – ஆவூர்
புதுக்கோட்டை மாவட்டம்

  21.01.2026

ஒருங்கிணைப்பாளர்
எஸ். சிவக்குமார்
முதல்வர் (பணி நிறைவு)
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்
காஞ்சிபுரம் மாவட்டம்
📞 80722 26768

செயல்பாட்டாளர்
B. நாகலட்சுமி
நூலகர்
ஊர்புற நூலகம்,
ஆவூர்
Mob:99529 36702

திட்டத்தின் அறிமுகம்

ஆவூர் ஊர்புற நூலகம் சார்பாக “நற்பண்பு தூதுவர்கள்” என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் குழந்தைகளை இளமை பருவத்திலேயே நல்ல பழக்க வழக்கங்கள் மற்றும் உயரிய நற்பண்புகள் உடையவர்களாக உருவாக்குவது நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளது.

திட்டத்தின் நோக்கங்கள்

குழந்தைகளுக்கு கல்வியுடன் இணைந்து நற்பண்புகளை வளர்ப்பது

நூலகத்தை ஒரு நற்பண்பு கற்றல் மையமாக மாற்றுவது

நல்ல மனிதர்கள், நல்ல குடிமக்கள் உருவாக வழிகாட்டுவது

குழந்தைகளுக்கான செயல்பாடுகள்:

நற்பண்புகளை வளர்க்கும் பல்வேறு செயல்பாடுகள் WhatsApp குழு மூலம் பகிரப்படும்

தற்போது நற்பண்பு உறுதிமொழி குழந்தைகளுக்கு பகிரப்பட்டுள்ளது

குழந்தைகள் அந்த உறுதிமொழியை நோட்டில் எழுதி வைத்து தினந்தோறும் வாசிக்க வேண்டும்

நற்பண்பு தூதுவர் Badge

நற்பண்புகளை சிறப்பாக கடைபிடிக்கும் குழந்தைகளுக்கு
ஊர்புற நூலகம், ஆவூர் சார்பாக
“நற்பண்பு தூதுவர்” Badge வழங்கப்படும்.

நற்பண்புகள் ஏன் குழந்தைகளுக்கு அவசியம்?

குடும்பங்கள் ஒற்றுமையுடன் வாழ

எதிர்காலத்தில் குழந்தைகள் வயது முதிர்ந்த பெற்றோர்களை பாதுகாக்கும் மனப்பாங்கு பெற

நல்ல சமுதாயம் உருவாக

பெற்றோர்கள் முதுமைக் காலத்தில் …
உணவு
உடை
இருப்பிடம்
மருத்துவம்
போன்ற தேவைகளுக்கு குழந்தைகள் பொறுப்பேற்கும் மனநிலை உருவாக திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

நிறைவுச் செய்தி
கல்வியுடன் நற்பண்புகள் இணையும் போது தான் குழந்தைகள் முழுமையான மனிதர்களாக உருவாக முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts