Email :143
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சண்முகா நடுநிலைப் பள்ளியில் குடியரசு தினத்தை முன்னிட்டு துளசி பார்மஸி சார்பில் நடத்தப்பட்ட கையெழுத்துப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயமும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் துரை.ஜெயபாக்கியம்
ஆசிரியை ஜெயந்தி மற்றும் ஆனந்தவல்லி ஆகியோர் செய்து இருந்தனர்.
இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் M. வெற்றி செல்வி குழந்தைகளுக்கு எழுத்து பயிற்சி அளித்தார்.
பள்ளி நிர்வாகி என் .சித்ரா அனைவரையும் பாராட்டினார்.













