சங்க கால முத்தரையர் சோழ பேரரசின் தலைநகரான, திருச்சி,உறையூரில், லிங்க நகரில் 24-8-2025 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பேரரசர் இறகு பந்து சங்கம் தொடங்கப்பட்டது.

தமிழுக்கு முதன் முதலில் மெய்க்கீர்த்தி கண்டவரும், போருக்கு செல்லும் போதே,திரு நியமம் கொற்றவை காளா பிடாரியின் ஆசியோடு வாகைப்பூ சூடி சென்று 16 க்கும் மேற்பட்ட போர்க்களங்களில் வெற்றி வாகை சூடியவருமான பேரரசர் 1350 வது(கி.பி .675-2025) அவதார திருநாள் கொண்டாட்டங்கள் , ஒரு பகுதியாக திருச்சி ,உறையூர் என் .எம். சுந்தர்ராஜன் ,லிங்கத்தடி தோட்டத்தில் இன்று இறகு பந்து சங்கம் பத்மஸ்ரீ எஸ்.தாமோதரன் அவர்களின் திருக்கரங்களினால் துவக்கி வைக்கப்பட்டது.

வாழ்க பேரரசர் புகழ்!
இந்நிகழ்வில் திரு பத்மஸ்ரீ S. தாமோதரன், உறையூர் N.M. சுந்தர்ராஜன், உறையூர் திரு கிருஸ்ணன் முத்துராஜா( முன்னால் கவுன்சிலர்), திரு பாஸ்கர் ,திரு சுந்தர், காஜாமலை காலனி , பேராசிரியர் டாக்டர் மீ.சந்திரசேகரன் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திறப்புவிழா இனிதே நடைபெற்றது.
அனைவருக்கும் நன்றி!













