ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு வாரமாக கொண்டாடப்படுகிறது. சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு 25.01.2025 அன்று தூய வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு இயக்கம் (RSP) இந்த இயக்கத்தில் உள்ள 95 மாணவர்களோடு பள்ளியின் தலைமை ஆசிரியர், அருள் தந்தை V .ஜார்ஜ் சே.ச., அவர்கள் பேரணியை தொடங்கி வைத்தார் .

இயக்கத்தின் பொறுப்பாளர்கள் P.பாலைய குமரேசன் பட்டதாரி ஆசிரியர் மற்றும் A . ஆண்டனி பிரபு, உடற்கல்வி ஆசிரியர் ,பள்ளியின் நுழைவு வாயில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் வழியாக கரூர் வழி சாலையில் அமைந்துள்ள பள்ளியின் பின் நுழைவு வாயில் வழியாக பள்ளியை வந்தடைந்தனர்.

சாலை விதிமுறைகளை பற்றி பேரணியில் மாணவர்கள் கோசம் எழுப்பியபடி சென்றனர்.
அருகில் அமைந்துள்ள கோட்டை காவல் நிலையத்தில் இருந்து காவலர்கள் பேரணியில் பாதுகாப்பு கொடுத்தனர்.














