Email :36
தைத்திருநாள் – தை பொங்கல்
தை பிறந்தால் வழி பிறக்கும்
தரணியில் நம்பிக்கை மலரும்,
உழவனின் வியர்வை கனியாகி
உலகமே இனிப்பில் மூழ்கும்.
சூரியனுக்கு நன்றி சொல்லி
சுடும் நெஞ்சம் சாந்தமடையும்,
மாடுகளும் மண்ணும் மனிதனும்
மகிழ்ச்சியில் ஒன்றாய் கலக்கும்.
பழமை பேசும் பானைச் சத்தம்
பாசத்தின் ஓசை ஆகி,
பொங்கும் பால் போல வாழ்க்கையும்
பெருக்கெடுத்து ஓடவேண்டும்.
தைப்பொங்கல் – தமிழரின் பெருமை,
உழைப்பின் உயர்ந்த விழா,
இனிமையும் ஒற்றுமையும்
என்றென்றும் நிலைக்கும் வாழ்வா!
ச. இசபெல்லா, சமூகப் பணித்துறை, துறைத் தலைவர், கிருஸ்துராஜ் கல்லூரி, திருச்சி.














