தூய வளனார் கல்லூரி வேதியியல் துறை ஆஸ்திரேலியா நிறுவனம் உள்ளிட்ட நான்கு அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெற்றுவரும் பன்னாட்டு வேதியியல் மாநாடுத் தொடக்க விழாவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வேதியியல் துறை, ஆஸ்திரேலியா அட்வென்டிஸ் நிறுவனம், திருவனந்தபுரம் மார் இவனாய்ஸ் நிறுவனம் பிஷப் ஹீபர் கல்லூரி வேதியியல் துறை மற்றும் கேரளாவைச் சர்ந்த கிரைஸ்ட் கல்லூரி வேதியியல் துறைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி படிப்பிடைப்பயிற்சி, ஆராய்ச்சி உதவி, திட்டக் கட்டுரைப் பயிற்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல தளங்களில் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.














