திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று 27/3/2025 வியாழக்கிழமை அன்று மாண்புமிகு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி குற்றவியல் வழக்கறிஞர் சங்க ஏற்பாட்டில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு!
“பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் என்ற தலைப்பில் வகுப்பு நடைபெற்றது.

நிகழ்வினை மாண்புமிகு மாவட்ட நீதிபதி M. கிறிஸ்டோபர் அவர்கள் துவக்கி வைத்தார். வகுப்பினை வழக்கறிஞர்கள் செல்வி S. மணிமொழி மற்றும் K. வெங்கடேஷ் ஆகியோர் நடத்தினார்கள் இந்நிகழ்வில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் P. V. வெங்கட் அவர்கள் வரவேற்றார். துணை தலைவர் S. சசிகுமார் அவர்கள் நன்றி உரை ஆற்றினார் பயிற்சி வகுப்பில் 150 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் செய்திருந்தார்.













