தொல்காப்பியரின் உருவப்படத்திற்குள் தொல்காப்பியம் முழுவதையும் எழுதுகின்ற உலக சாதனை நிகழ்வைப் பெங்களூரைச் சார்ந்த சியாமளா ஆர்ட்ஸ் அன் கிராஃப்ட் நிறுவனம் முன்னின்று செயல்படுத்தியது. இந்தியா, இலங்கை, கனடா, பிரிட்டானியா நாடுகளைச் சார்ந்த 45 தமிழறிஞர்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதினர். உலக சாதனையாளர் திரு.வெங்கடேசன் அவர்கள் இந்நிகழ்வை உலக சாதனையாக அங்கிகாரம் ஆல் இண்டியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் வழங்கினார். திருச்சியைச்சேர்ந்த மேனாள் முதுகலைத் தமிழ் ஆசிரியர் ,உலக சாதனையாளர், திருக்குறள் தூதர், சிலம்புச் செல்வி மங்களமேரி அவர்கள் தமிழில்17 மணிநேரத்தில் முதலாவதாக எழுதினார்.
அனைவரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.














