• Home
  • தமிழ்நாடு
  • நம்மாழ்வார் பண்ணையில் கல்லூரி மாணவர்களுக்கு வேளாண்மை களப்பயிற்சி!
தமிழ்நாடு

நம்மாழ்வார் பண்ணையில் கல்லூரி மாணவர்களுக்கு வேளாண்மை களப்பயிற்சி!

Email :50

நம்மாழ்வார் பண்ணையில் கல்லூரி மாணவர்களுக்கு வேளாண்மை களப்பயிற்சி!

செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்களுக்கு நீடித்த நிலைத்த இயற்கை வழி வேளாண்மை களப்பயிற்சி
கல்லூரி செப்பர்டு விரிவாக்கத்துறையின் 40-வது ஆண்டினை முன்னிட்டு உன்னத பாரத இயக்கத்தின் கீழ் சேவை செய்யும் கிராமங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு நீடித்த நிலைத்த இயற்கை வழி வேளாண்மை களப்பயிற்சி கரூர் மாவட்டம் கடவூர் பகுதியில் அமைந்துள்ள நம்மாழ்வார் சூழலியல் அறக்கட்டளை வானகம் பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் அருள்முனைவர் மரியதாஸ் சே ச அவர்களின்  வழிகாட்டுதலின் படி செப்பர்டு விரிவாக்கதுறையின் இயக்குனர் அருள்முனைவர் சகாயராஜ் சே ச பயிற்சிக்கு தலைமை தாங்கினார் நம்மாழ்வார் சூழலியல் அறக்கட்டளையின் நிர்வாகி திரு ரமேஷ் திரு கரிகாலன் பயிற்சியாளர் மருதையப்பன் அவர்கள் நீடித்த நிலைத்த இயற்கை வழி வேளாண்மை களப்பயிற்சியில் மண் பாதுகாப்பு  இயற்கை வழி வேளாண்மை செய்யும் முறை, உரத் தயாரிப்பு, நஞ்சு இல்லா உணவு மற்றும் பால், பாரம்பரிய அரிசி ரகங்கள் சாகுபடி மற்றும் விதைகள் பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்களை நேரடியாக பயிற்சி கொடுத்தார். இப்பயிற்சியில் பங்கு பெற்ற மாணவர்கள் மழைநீர் சேகரிப்பின் அவசியம், பல தானிய விதைப்பு முறை, பூச்சி கட்டுப்பாடு போன்றவறை தெரிந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் செப்பர்டு விரிவாக்க துறையின் முதுநிலை ஒருங்கிணைப்பாளர் திரு லெனின் அனைவரையும் வரவேற்றார் விரிவாக்கத்துறையின் இளநிலை ஒருங்கிணைப்பாளர் திரு ஜோசப் கிறிஸ்து ராஜா நன்றி கூறினார்.

விரிவாக்கத்துறையின் இளநிலை ஒருங்கிணைப்பாளர் திரு சுதாகர் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

விரிவாக்கத்துறையின் ஒருங்கிணைப்பாளர்கள் திரு  ஜெயச்சந்திரன் மற்றும் திருமதி யசோதை ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்களப்பயிற்சியில் 57 மாணாக்கர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts