தமிழ்நாடு

திமிலோடும் தமிழோடும்!

Email :256

இல்லந்தோறும்
அன்பும் அறமும் இன்பமும் பொங்கட்டும்
சீர்மிகு தமிழர் நிலத்தில்
முத்தமிழும்
முப்பாலும் பொங்கட்டும்
உழைக்கும் மக்களின் உன்னதத் திருநாள்
உழவை உழவர்களை போற்றிடும் உயர் பெருநாள்
செங்கரும்பு மஞ்சள் சிறுபீளைப் பூ வெப்பாலைத் தோரணம் வாசல் தோறும் வண்ணக் கோலங்கள்
பல்லுயிர்களைக் கொண்டாடும் தமிழர் திருநாள்
திமிலோடும் தமிழோடும் கூர்மை பண்பாட்டுடன் பாயும் திணைகளின் திருநாள்
உயிர்கள் யாவையும் உறவாய் இணைத்து சமத்துவம் சமைத்து  மத சாதிய சனாதனங்களை பழையன கழிதலாய் எரிக்கும் மாண்பு நிறை மானுடத் திருநாள்
புத்தாடை புது அரிசி புதுப்பானை
இதயத்தில் காதல் பொங்க
பரங்கிப் பூக்களும் பூசணிப் பூக்களும் தை மகளுக்கு மாலைகள் சூட்ட
சலங்கைக் கட்டி
குஞ்சங்கள் கட்டி
கொம்புகளில் குப்பியாடும்
காளைகள் கால்நடைகள் கொண்டாடும் பெருநாள்
வாடி வாசலில் ஏறு தழுவி
ஏற்றம் தழுவி
வாழ்வு தழுவி
வளங்கள் தழுவி
வழுவாத தமிழர் மறத்தின் மரபு தழுவி
அறம் தழுவி
மாண்பு தழுவி
மானம் தழுவி
மகிழ்வு தழுவி யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கொண்டாடுவோம்
தைத் திருநாள் தமிழர் திருநாள்
வாழ்த்துகள்.

சதீஷ் குமரன்
பேராசிரியர், கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரி,
செயலர், தண்ணீர் அமைப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts