
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் இருங்கலூர் ஊராட்சி தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில் பொங்கல் விளையாட்டு விழா 16.01.25 நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு கலந்துக் கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

இருங்களூர் ஊராட்சி மன்றம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வின்சென்ட் தலைமை வகித்தார். சமயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர் அருட்சுடர் அறக்கட்டளை பிரதிநிதி சேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சங்க பொறுப்பாளர்கள்,இளைஞர்கள் செய்திருந்தனர்.















