தமிழ்நாடு

தன்மானம் நம்அடையாளம்!

அரிமாவை அதன்குகையில்தனியாளாய்ச் சந்தித்தேன்அடர்வனத்தில் ஒருவனாய்அச்சமின்றிச் சென்றுவந்தேன். ஆழ்கடலில் மூழ்கிமூழ்கிஅழகுமுத்து நானெடுத்தேன்நீள்நதியில் நீந்திநீந்திநிலவழகை ரசித்துவந்தேன். வாளெடுத்து வந்தவரைநேரெதிர்த்துக் கரம்முறித்தேன்தோள்தட்டிக் குதித்தவரைமார்தட்டித் தோற்கடித்தேன். அஞ்சாமை நெஞ்சிருக்கஎஞ்ஞான்றும் குனிதலில்லைஅறிவாற்றல் துணையிருக்கஎப்பொழுதும் பணிதலில்லை. எதனையும் எதிர்கொள்வோம்எமனையும் ஆட்சிசெய்வோம்அடக்கஒருவன் வருவானெனில்அடக்கமவனை செய்திடுவோம். தமிழினத்தின் பெருமையைதரணிக்கு எடுத்துரைப்போம்தன்மானம் நம்அடையாளம்தனித்தென்றும் காட்டிடுவோம். வணக்கத்துடன்:வீ.கோவிந்தசாமி,திருச்சிராப்பள்ளி.

Read More